தங்கச்சி
Posted: Sat Jul 04, 2020 5:48 pm
நான்கு வருட இடைவெளியில்
எந்தன் தாயவள் பெற்றெடுத்த
குட்டி ராட்சசியும் இவள் தான்
விடிந்ததில் இருந்து இரவாகும்
நேரம் வரை என்னை ஆட்டிப்
படைக்கும் மந்திரக்கோலும் இவள் தான்
தமக்கை என்ற போதிலும்
என்னைத் தங்கை போலவே
நடத்தும் குறும்புக்காரியும் இவள் தான்
தட்டிக் கொடுத்துப் பேசுகின்ற போது
நான் ஆசையுடன் அணைத்துக்
கொள்ளும் தோழியும் இவள் தான்
அதே என்னைத் தட்டி விட்டுப் பேசும்
போது நான் கோபத்துடன் அடிக்கும் அன்பான எதிரியும் இவள் தான்
எனக்காக வக்காளத்து வாங்கிப்
பேச ஓடி வருகின்ற
சண்டைக் கோழியும் இவள் தான்
அதே அம்மா அடிக்கின்ற போது ஓடி
ஒழிந்து வேடிக்கை பார்க்கின்ற
களவாணியும் இவள் தான்
முடிவெடுக்க முடியாமல் நான் விழிக்கின்ற வேளையில் சரியான அறிவுரை
கூறும் ஆசானும் இவள் தான்
நான் விரும்பும் எனது எழுத்துக்குக் கிடைத்த இரண்டாவது வாசகியும்
இவள் தான்
என் பேனாவின் முனையில் ஊற்றெடுக்கும் கவிதைகளுக்குக் கிடைத்த
இரண்டாவது இரசிகையும் இவள் தான்
துவண்ட நேரங்களில் தோள் தொட்டு நானிருக்கிறேன் உனக்கு என்ற தைரியம் கொடுத்தவளும் இவள் தான்...
உறவுகளுக்கு முன்பாக வாய் இருந்தும் ஊமையாக இருக்கும் எனக்காக வெளிப்படும் வார்த்தைகளும் இவள் தான்...
எதையுமே மறைக்காமல் எழுதித் தள்ளுகின்ற என் நாட்குறிப்பும்
இவளே தான்...
அன்னையும் தந்தையுமாக என்
கையில் கொடுத்த குட்டித்
தேவதையும் இவளே தான்...
✒பானுரதி✒
எந்தன் தாயவள் பெற்றெடுத்த
குட்டி ராட்சசியும் இவள் தான்
விடிந்ததில் இருந்து இரவாகும்
நேரம் வரை என்னை ஆட்டிப்
படைக்கும் மந்திரக்கோலும் இவள் தான்
தமக்கை என்ற போதிலும்
என்னைத் தங்கை போலவே
நடத்தும் குறும்புக்காரியும் இவள் தான்
தட்டிக் கொடுத்துப் பேசுகின்ற போது
நான் ஆசையுடன் அணைத்துக்
கொள்ளும் தோழியும் இவள் தான்
அதே என்னைத் தட்டி விட்டுப் பேசும்
போது நான் கோபத்துடன் அடிக்கும் அன்பான எதிரியும் இவள் தான்
எனக்காக வக்காளத்து வாங்கிப்
பேச ஓடி வருகின்ற
சண்டைக் கோழியும் இவள் தான்
அதே அம்மா அடிக்கின்ற போது ஓடி
ஒழிந்து வேடிக்கை பார்க்கின்ற
களவாணியும் இவள் தான்
முடிவெடுக்க முடியாமல் நான் விழிக்கின்ற வேளையில் சரியான அறிவுரை
கூறும் ஆசானும் இவள் தான்
நான் விரும்பும் எனது எழுத்துக்குக் கிடைத்த இரண்டாவது வாசகியும்
இவள் தான்
என் பேனாவின் முனையில் ஊற்றெடுக்கும் கவிதைகளுக்குக் கிடைத்த
இரண்டாவது இரசிகையும் இவள் தான்
துவண்ட நேரங்களில் தோள் தொட்டு நானிருக்கிறேன் உனக்கு என்ற தைரியம் கொடுத்தவளும் இவள் தான்...
உறவுகளுக்கு முன்பாக வாய் இருந்தும் ஊமையாக இருக்கும் எனக்காக வெளிப்படும் வார்த்தைகளும் இவள் தான்...
எதையுமே மறைக்காமல் எழுதித் தள்ளுகின்ற என் நாட்குறிப்பும்
இவளே தான்...
அன்னையும் தந்தையுமாக என்
கையில் கொடுத்த குட்டித்
தேவதையும் இவளே தான்...
✒பானுரதி✒